Thursday, November 12, 2009

மாநாட்டுக் கலந்தாய்வுக் கூட்டம்

அருள்மிகு சாந்தலிங்கப் பெருமான் இன்னருள் பெருகுக, திருவள்ளுவராண்டு 2041 தைத்திங்கள் 23,24,25, (5,6,7பிப்ரவரி 2010) ஆகிய நாட்களில் பன்னிரண்டாவது உலக சைவ மாநாடு தில்லையில் நடைபெறவுள்ளது, இம்மாநாடு சிறப்பாக அமையும் பாங்கில் ஆங்காங்கு சிறப்புக் கலந்தாய்வுக் கூட்டங்க்ள் கீழ்கண்ட இடங்களில் நடை பெறவுள்ளன.. அதுபோழ்து தங்களுக்கு அருகில் உள்ள இடத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வதுடன் தங்களுக்குத் தெரிந்த அன்பர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டுகிறோம். அந்தந்த அமைப்பின் சார்பாக கலந்து கொண்டு மாநாடு சிறக்க கருத்துக்கள் நல்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
வேண்டுந்தங்களன்பு
இப்படிக்கு,
விழாக்குழுவினர்

நாள்
8.11.09 மாலை 6 மணி
9.11.09 மாலை 2 மணி
வாரியார் சாமிகள் ஞான வளாகம், காங்கேய நல்லுர், வேலூர்.

14.11.09 காலை 9.30 மணி, செங்குந்தர் ஆண்கள் மேனிலைப்பள்ளி,சவிதா மருத்துவமனை பேருந்து நிறுத்தம், ஈரோடு.

மாலை 3.00 மணி,தியாசபிகல் சொசைட்டி, சுகவனேசுவரர் கோயில் பின்புறம்,சேலம்.

15.11.09 காலை 9.00 மணி,செயம் மகால், சென்னைப் பாதை, விழுப்புரம்

மாலை 4.00 மணி,ஆறுமுக நாவலர் நிலையம், மாலைக்கட்டி தெரு, சிதம்பரம்

16.11.09 காலை 9.00மணி,அருள்மிகு அபிமுகேசுவரர் திருக்கோயில்
திருமண மண்டபம்,கீழ்கரை, மகாமகக் குளம், கும்பகோணம்

மாலை 3.00மணி,திருச்சி தமிழ்ச்சங்கம், மேலரண் சாலை ,திருச்சி.

No comments:

Post a Comment