Wednesday, October 28, 2009

உலக சைவ மாநாடு

சாந்தலிங்கர் தாண்மலர் வாழ்க
அன்புடையீர்,
வணக்கம்.உலக சைவப் பேரவையின் பனிரென்டாவது உலக சைவ மாநாடு தில்லையில்( சிதம்பரம் ) வரும் பிப்ரவரி மாதம் 5,6,7 தேதிகளில் நடத்தத் திட்டமிடப்பட்டு உள்ளது.பேரூர் ஆதீனம் சீர்வளர்சீர் அடிகள் பெருந்தகையையும், யோகானந்த அடிகள் ( பிரான்சு ) அவர்களையும் அமைப்பாளர்களாகக் கொண்டு , சீர்வளர்சீர் குன்றக்குடி குருமகா சந்நிதானம் அவர்களைத் தலைவராகக் கொண்டுவிழாக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. சைவ ஆதீன குருமகா சந்நிதானங்களைப் புரவலர்களாகக் கொண்டுள்ள இந்த சைவ மாநாட்டில் பங்கேற்க தங்களை வரவேற்கிறோம்.தங்களுக்குத் தெரிந்த சைவ ஆர்வலர்களின் முகவரி, தொலைபேசி, மற்றும் மின்அஞ்சல் முகவரி ஆகியவற்றைத் தெரிவிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
வேண்டுந் தங்களன்பு
அன்புடன்
தவத்திரு.மருதாசல அடிகள்
தொடர்பு கொள்ள மின்அஞ்சல் முகவரி:
yoganandaadikal@gmail.com, anbusivaom@rediffmail.com

1 comment:

  1. மாநாடு சிறப்புற நடந்தேற விழைகிறேன்; எம்பெருமான் திருவருள் என்றும் துணைநிற்கும்.

    பணிவுடன்

    அ. நம்பி

    ReplyDelete